top of page

டெல்லியில் தமிழக எம்.பி.களை சந்தித்த நமது சங்க தோழர்கள்


கிராம வங்கி ஊழியர்களின் பிரச்சினைகளை எம்.பிக்களிடம் விளக்கி, பாராளுமன்றத்தில் தங்கள் ஆதரவுக் குரலை எழுப்புமாறு வேண்டி, ஜூன் 24, 25, 26 தேதிகளில் டெல்லியில் முகாமிட்டு எம்.பிக்களை சந்திக்குமாறு நமது AIRRBEA அறைகூவல் விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் தோழர்கள் பத்மநாபன், காமராஜ் (TNGBOA), தோழர்கள் பரிதிராஜா, வினோத்குமார் (TNGBWU), தோழர் சோலைமாணிக்கம் (TNGBRS) ஆகியோர் டெல்லி சென்று தமிழக எம்பிக்களை சந்தித்து நமது கோரிக்கைகளை விளக்கி ஆதரவு திரட்டினர். நிதி அமைச்சகத்திற்கு அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் எழுதவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

(Click on images to view description in gallery)


Comments


world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page