கிராம வங்கிகளுக்கு ஊதியம் நிர்னயம் செய்யும் உரிமை Regional Rural Banks Actல் section 17 (1) க்கு இருக்கிறது. அந்த செங்க்ஷன் படிதான் 10th Bi-partite settlement படி நமக்கு Pay and allowances வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுபோன்ற துறை வாரியான settlement, Awardகளை நிர்வாகங்கள் மீறுவது குற்றம் என Industrial Disputes Act- section 33 சொல்கிறது.
ஆனால் தமிழ்நாடு கிராம வங்கியில் என்ன நடக்கிறது?
புதிதாக பணிக்குச் சேர்கிற கிளரிக்கல் தோழர்களுக்கு முதல் ஆறு மாதத்திற்கு Single Window Operator Allowance (Special Pay – Rs.820 ) கொடுக்கப்படுவதில்லை. Bi-partite settlementல் எங்கும் அப்படி ஒரு விதி இல்லை. ஆனால் இந்த நிர்வாகம் தானடித்த மூப்பாக, சட்டத்திற்கு புறம்பாக அந்த Special Pay வை நிறுத்தி வைத்துக் கொள்கிறது.
இதன் மூலம் இந்த நிர்வாகம் RRB Act ஐயும் மீறுகிறது.
ID Actஐயும் மீறுகிறது.
(தொடரும்)
コメント